Thursday, December 02, 2004

ஆடிய காலும் பாடிய நாவும் என்பதுபோல, அலைந்த வலையும் என்பதான நிலை. இணையம் கிட்டத்தட்ட இரவுநேரத்திலே மலைப்பாதைப்புகையிரத்திலே ஓர இருக்கையிலே பயணிப்பதுபோல எனக்கு ஆகியிருக்கின்றது என நினைக்கிறேன்; எட்டியிருந்து அதன் அழகை இரசித்துக்கொண்டு என் பாதையிலேயே இலக்கினை நோக்கிச் செல்வதாக இருக்கின்றது. இந்தநிலையிலே உள்ளத்துக்குக் கிஞ்சித்தும் பிடிக்காதபோதும், இந்தக்கூடிக்காணும் காட்சியின் தேவைக்காக, ஒரு காரியம் பண்ணவேண்டியதாக இருக்கின்றது; என் துறை சார்ந்த மீதிப்பதிவுகளின் குவியமான இந்தப்பதிவினை இதுவரை காலமும் தகுதரத்திலேயே நிறுத்திவைத்திருந்தேன்; அதை விரும்பாமலே, காலத்தின் கட்டாயமாக யூனிக்கோட்டுக்கு இன்றுமுதல் மாற்ற எண்ணியிருக்கின்றேன்.


No comments: