Monday, January 24, 2005

புனைவு

கழியும் பழையது
அறைச்சி

வழக்கம்போல கதவு அதிர அதிரத்தான் கிழவி அறைக்குட் போனது. ஓரிரண்டு ஆண்டுக்காலமாக அறை தன்னிலே ஆத்திரமாக இருக்கிறது என்று தெரிந்தும் கிழவிக்கு உள்ளே போகாமல் இருக்கமுடிவதில்லை. அறைச்சி முதுகைச் சிலிர்த்துக்கொண்டு பொருக்குகளை உதிர்த்துக் கொட்டினாள்; பின், பல்லை நெருமிக்கொண்டு, "குமரி, பாரடி அவளுகளின்ரை மேனி மினுக்கையும் என்ரை சிரங்குத்தோலையும்" - அவள் காலை உதைத்தபோது, முதல்நாட்காலை பாடசாலைக்குப் போகும் குழந்தையின் வீரிட்ட அழுகையும் சேடம் இழுக்கையிலே வாயைத்திறந்து வில்லங்கத்துக்குப் பாலைப் பருக்கிறபோதும் மறுத்து கடைவாயாற் கழிக்கும் கிழவியின் வறட்டுப்பிடிவாதமும் வெளிப்பட்ட உதையிலே ஒன்றாகத் தெரிந்தன.


No comments: