Saturday, February 12, 2005

புனைவு

கழியும் பழையது
பொருத்தமான தலைப்பு அகப்படவில்லை; மன்னிக்கவும்

எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் வெங்கடேஸ சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு, கணினியிலே 'DOOM II' விளையாட்டில் ஏவுகணையிலே கண்டபடி காணாதபடி காவற்படையும் அசுரவிலங்குகளும் சுட்டுக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தேன், முப்பத்தைந்து வயது நான். இதனால், இவன் ஒரு 'புட்டுக்கு பிளேன் சோடா ஊத்திப் பினைஞ்சு சாப்பிடக்கூடிய நட்டுக் கழண்ட கேஸ்' என்று நீங்கள் சிரிக்கக்கூடாது. சூழ்நிலை அப்படி நண்பரே; அப்பனும் அண்ணனும் அரணாக இல்லாமல், 'ரியூசனுக்குப் போகமாட்டாத சாமர்த்தியப்பட்ட பொம்பிளைப்பிள்ளையலெல்லாம் துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்ளை அலையவோ அல்லது முகம் தெரியாத மாப்பிள்ளையை எண்ணி, அகம் தெரியாத ஏஜென்சிக்காரனை நம்பி, நகை -அதுக்குத் தங்க நட்டெல்லாம்- உடம்பில நட்டு, மொஸ்கோ கண்டு, லெசெத்தோ கண்டு, ஒயில் ராங்கருக்குள்ளை கண்டவன் நிண்டவனோடயெல்லாம் உராஞ்சு கிடந்து உயிர் தப்பிக் கனடா வரும்' நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சமூகத்திற் பிறந்த ஒருத்தன் இப்படியெல்லாம் செய்தால், அதைக் கண்டு நீங்கள் சிரிக்கக்கூடாது என்றில்லை; சரியாச் சொன்னால், சிரிக்க முடியாது.

No comments: