Wednesday, February 16, 2005

கணம்

போற்றுவேன் உனை

போற்றுவேன்
எனக்கொரு கவிதை தா;
பச்சைக்குழந்தை வாய்க் கட்டி எச்சிலெனப்
புத்தம்புதிதாக;
அடுத்தாற்போல், அலுத்துப்போய்விட்டதா,
அதனால், மீதி அத்தனை பூச்சொல்லும்
அங்குப் புக்காமற் பார்;
புராதனம்; புனிதம்; புராணம்; புரட்சி;
புணர்ச்சி; புழு; புழை; புடுக்கு.....
முக்கியமாய், அந்தப் பொல்லாஞ் சிறகு விரிக்கும் பொய், புனைவு.

No comments: