Sunday, April 10, 2005

கூழ் - 2

தோட்டக்காரன்

இரபீந்திர நாத் தாகூரின் தோட்டக்காரன் எனக்குப் பிடித்ததொரு தொகுதி. அவருக்குப் புகழைத் தந்ததாகச் சொல்லப்படும் கீதாஞ்சலிகூட அந்த அளவுக்குப் பிடித்ததில்லை. என் குறை மொழியறிவை வைத்துக்கொண்டு 1987 இற்கும் 1992 இற்கும் இடையிலே தோட்டக்காரனிலே சில பூக்களை முழி பெயர்க்க முயற்சித்தேன்.
================



22

When she passed by me with quick steps, the end of her skirt
touched me.
From the unknown island of a heart came a sudden warm breath of
spring.
A flutter of a flitting touch brushed me and vanished in a
moment, like a torn flower petal blown in the breeze.
It fell upon my heart like a sigh of her body and whisper of her
heart.

விரைந்து அடியிட்டு
அவள் என்னைக் கடக்கையிலே
தொட்டுச் சென்றது அவள்
பாவாடை முனை எனையே.

இதயத்தின் முன்னறியாத் தீவிருந்து
எழுந்து வந்தது ஓர் உடனடி
வசந்தத்தின் சூடான சுவாசமிங்கு.

ஒரு தாவு தொடுகையின் சிறகடிப்பு
என்னை உரசி, பின் மறைந்தது கணத்தே,
ஓர் உதிர்ந்த மலர் இதழ்
தென்றலில் ஊதப்பட்டது போலிங்கே.

அது தாக்கிப் போனது என் மனதை
அவள் உடலின் பெருமூச்சென,
அவள் இதய இரகசிய உச்சரிப்பென.
(தாகூரின் "தோட்டக்காரன்" -22)


47

If you would have it so, I will end my singing.
If it sets your heart aflutter, I will take away my eyes from
your face.
If it suddenly startles you in your walk, I will step aside and
take another path.
If it confuses you in your flower-weaving, I will shun your
lonely garden.
If it makes the water wanton and wild, I will not row my boat by
your bank.

அவ்வண்ணம் நீ எண்ணம் கொண்டிருப்பின்,
நிறுத்துகிறேன் நான் என் நிகழ்காலப் பாடுதலை.

அஃது உன் இதயம் படபடக்கப்
படுத்துமென்றால்,
எடுக்கிறேன் என் கண்கள் உன்
முகமிருந்து வேறெங்கோ.

அது உன் நடையில் உடன்
அதிர்ச்சியினைக் கொடுக்குமென்றால்,
அடி விலக்கி, நான் எடுப்பேன்
அதுவில்லா வேறு பாதை,

அது உன் பூமாலை பின்னுதலில்
குழப்பம் உனைப் படுத்துமென்றால்,
தவிர்க்கின்றேன் உன்
தனிமைத் தோட்டத்தை இனி நான்.

அது நீரை விளையாட்டுக்காட்டி,
வெறியோட்டிப் பார்க்குமென்றால்,
வலிக்கமாட்டேன் என் ஓடம் - இனி
உன் நதியின் கரையினிலே.
(தாகூரின் "தோட்டக்காரன்" -47)


48

Free me from the bonds of your sweetness, my love! No more of
this wine of kisses.
This mist of heavy incense stifles my heart.
Open the doors, make room for the morning light.
I am lost in you, wrapped in the folds of your caresses.
Free me from your spells, and give me back the manhood to offer
you my freed heart.

என் அன்பே,
விடுதலை செய் என்னை
இனிமையின் தளையிருந்து. - வேண்டாம்,
இனிமேலும் இந்த முத்தம்
பொதி போதை மது.

இந்த செறி நறும்புகையின்
புகார்மண்டலம் புதைக்கின்றது
ஒரு கட்டுக்குள் என் மனதை.

திறந்து விடு வாயில்களை;
காலை ஒளிக்கு
வெளி இங்கு நீ அமை.

உன்னிடத்தே தொலைந்துள்ளேன்,
கட்டுக்கட்டான உன் மென்
இன்பத் தொடுகைகளிற் சுற்றுப்பட்டு.

விடுவி எனை உன் மந்திர
உச்சாடனங்கள் விட்டு வெளி;
மீளக் கொடுத்து விடு என் ஆண்மை - உனக்கு,
நான் அர்ப்பக்க வேண்டும் என்
கட்டற்ற விடுதலை இதயம் என்பதற்காய்.
(தாகூரின் "தோட்டக்காரன்"-48)


28

Your questioning eyes are sad. They seek to know my meaning as
the moon would fathom the sea.
I have bared my life before your eyes from end to end, with
nothing hidden or held back. That is why you know me not.
If it were only a gem I could break it into a hundred pieces and
string them into a chain to put on your neck.
If it were only a flower, round and small and sweet, I could
pluck it from its stem to set it in your hair.
But it is a heart, my beloved. Where are its shores and its
bottom?
You know not the limits of this kingdom, still you are its queen.
If it were only a moment of pleasure it would flower in an easy
smile, and you could see it and read it in a moment.
If it were merely a pain it would melt in limpid tears,
reflecting its inmost secret without a word.
But it is love, my beloved.
Its pleasure and pain are boundless, and endless its wants and
wealth.
It is as near to you as your life, but you can never wholly know
it.

உன் வினாவெழுப்பும் விழிகள்
சோகத்திற் தாம் மிதக்கும்.
அவை, கடல் ஆழம் அளக்க விழை
முழுமதிபோல - என் பொருளறிய
வழி தேடும்.

உன் கண் முன்னே
ஆதி முதல் அந்தம் வரை
நான் நிர்வாணப்படுத்தி வைத்தேன்,
என் வாழ்வு எல்லாமே; எதும்
மறைத்திடாது, என்னுள்ளே
தரித்துப் பதுக்கிடாது.- அதனாற்றான்,
இன்னும் புரியவில்லை இங்கே என்னை, நீ.

அஃது ஓர் இரத்தினம் மட்டும் என்றிருந்தால்,
ஆயிரம் துண்டங்களாய் நான் உடைத்து,
கோர்த்திருப்பேன் எல்லாமே உன் கழுத்துக்காய்
ஒரு கொடிமாலையென.

அது, வட்டமாய், சிறிதாய், மதுரமாய்,
ஒரு மலர் மட்டும் என்றிருந்தால்,
தண்டிருந்து கிள்ளி எடுத்திருப்பேன் நான்
அஃது உன் கூந்தலிலே சூட்டி வைக்க.

ஆனால், அஃது என் இதயம்,
என் அன்புக்குரியவளே.
எங்கெனச் சொல்ல
அதன் கரைகளும் ஆழங்களும்?

நீ அறியாய் இவ் விராஜ்யத்தின் எல்லைகளை,
இத்தனைக்கும், அதன் வீற்றிருக்கும்
இரா நீ என்றானபோதும் இங்கே.

அது மட்டும் ஒரு சுலபப் புன்சிரிப்பில்
மலரும் நொடிநேர மகிழ்வு என்றால்,
காண முடியும் அதை நான்; கூடவே,
கண நேரத்தில் வாசித்தும் இருப்பேன்.

அது ஒரு வலி மட்டும் என்றானால்,
தான் ஒரு சொல் எடுத்துச் கூறாமலே
உள்ளகத்து கிடக்கையெல்லாம்
தெள்ளிய கண்நீ­ர்துளியில்
அள்ளிப் பிரதிபலித்து ஆங்கே
உருகிக் கரைந்திருக்கும்.

ஆனால், இது காதல்,
என் அன்புக்குரியவளே.

இதன் மகிழ்வும் வலியும்
வரம்பற்றவை;
அதன் தேவையும் செல்வமும்
முடிவற்றவை.

அது உனக்கு மிகவும் அருகானது,
உன் உயிர்போல, ஆனால்,
என்றுமே முழுதாய் அறியாய்
அதை நீ.
(தாகூரின் "தோட்டக்காரன்"-28)


62

In the dusky path of a dream I went to seek the love who was mine
in a former life.

Her house stood at the end of a desolate street.
In the evening breeze her pet peacock sat drowsing on its perch,
and the pigeons were silent in their corner.

She set her lamp down by the portal and stood before me.
She raised her large eyes to my face and mutely asked, "Are you
well, my friend?"
I tried to answer, but our language had been lost and forgotten.

I thought and thought; our names would not come to my mind.
Tears shone in her eyes. She held up her right hand to me. I
took it and stood silent.

Out lamp had flickered in the evening breeze and died.

ஒளி தளர்ந்த கனவுப்பாதையினூடே
நான் நடந்தேன், என் முன்னைய
பிறவியொன்றின் அன்பிற்குரியாளைத் தேடி.

கைவிட்ட ஒரு தெரு முடிவினிலே
கிடந்தது அவள் குடில்.

மாலை இளங்காற்றினிலே, அவள் செல்ல
மயில் அரைத்தூங்கிக் கிடந்தது அதன் கூட்டில்.
புறாக்கள் தம்மூலைகளில் மோனத்தே முடங்கியதாய்.

அவள் வாயிலிலே விளக்கு வைத்தாள்; பின்,
வந்து நின்றாள் என் முன்னே.

தன் அகன்ற விழி என் முகம் முன்னெழுப்பி
பெரு மௌனத்தே கேட்டிருந்தாள்,
"நலமா நீ உள்ளனையோ, என் நண்ப?"

பதிலிறுக்க முயற்சியுற்றேன், ஆயின்
எம் மொழிகள் தொலைந்துபோயின;
மேலும், மறக்கப்பட்டும்கூட

நான் சிந்தித்தேன்; மேலும் சிந்தித்தேன்;
எங்கள் பெயர்களோ மீண்டு
எழுதலில்லை என் மனத்தில்.

நீர்ப் பளபளப்பில் அவள் கண்கள்.
நீட்டினாள் எனக்காய் அவள் தன் வலக்கரம்.
அது எடுத்து மௌனத்தே ன்றிருந்தேன் நான்.

எம் விளக்கு ஒரு கணம்
மாலைத்தென்றலில் மினுங்கி, பின்
மடிந்து போனது.
(தாகூரின் "தோட்டக்காரன்"-62)

17 comments:

சன்னாசி said...

//தோட்டக்காரனிலே சில பூக்களை முழி பெயர்க்க முயற்சித்தேன்.//

'மொழிபெயர்ப்பு' மாதிரித்தான் இருக்கிறது, 'முழிபெயர்ப்பு' போலத் தோன்றவில்லை :-)

கீதாஞ்சலி என்னவோ எனக்கும் அவ்வளவாகப் பிடித்ததில்லை...

-/பெயரிலி. said...

தமிழ்ப்பாம்பு,
ஓரிரு பகுதிகள் தவிர்த்து கீதாஞ்சலியோடு ஒன்ற முடியவில்லை. தோட்டக்காரனிலே இருக்கும் உணர்வுபூர்வமான தன்மை கீதாஞ்சலியிலே இல்லாததுபோல உணர்ந்தேன்.

சம்பந்தப்படாது ஒரு வேண்டுகோள்; அடிக்கடி நான் பார்க்கும் பதிவுகளின் பதிவாளர்களிலே, மின்னஞ்சல் என்னிடம் இல்லாத பதிவாளர்களின் அஞ்சல் முகவரியைப் பெற்றுக்கொண்டால், மொட்டைக்கடிதம் போட வசதிப்படுமே என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடையதையும் வசதிப்பட்டால், என் பாவநகருக்கு peyarili1000 @ yahoo.com இற்கு அனுப்பினீர்களென்றால், மகிழ்ச்சி.

கறுப்பி said...

அருமையான "கூழ்". மீண்டும், மீண்டும் வாசித்து உள்வாங்க முடிகின்றது. நல்ல மொழிபெயர்ப்பு “முழி” பெயரவில்லை.

இப்பவெல்லாம் ஏனோ புளொக் "போரிங்"காகப் போவது போல் படுகின்றது. எங்கு பார்த்தாலும் சண்டை சர்சரவு. இப்படி சிலரின் சில நல்லதுகளை வாசிப்பதோடு சரி. முன்பிருந்த ஆர்வம் மறைந்துவிட்டது கறுப்பிக்கு.

கறுப்பி said...

//அது உன் நடையில் உடன்
அதிர்ச்சியினைக் கொடுக்குமென்றால்\\
hmmmm

Jayaprakash Sampath said...

தாகூர், தஸ்லீமா நஸ்ரீனை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதலில்

//அடிக்கடி நான் பார்க்கும் பதிவுகளின் பதிவாளர்களிலே, மின்னஞ்சல் என்னிடம் இல்லாத பதிவாளர்களின் அஞ்சல் முகவரியைப் பெற்றுக்கொண்டால், மொட்டைக்கடிதம் போட வசதிப்படுமே என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடையதையும் வசதிப்பட்டால், என் பாவநகருக்கு peyarili1000 @ yahoo.com இற்கு அனுப்பினீர்களென்றால், மகிழ்ச்சி. //

என்று எழுதியிருப்பதை முழி பெயர்க்கவும். விருமாண்டிக்கும், உங்களுக்கும் சொந்தரங்கமான விஷயம் என்றால் விட்டு விடுங்கள். ஏன்னாக்க, பத்து நாட்களுக்கு முன்பு, ஒரு மேட்டருக்காக, உங்கள் முகவரியைத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்கு லக் இல்லை :-)

-/பெயரிலி. said...

பிரகாஷ்,
ஒன்றுமில்லை; இணையம் ஒரு போதை என்பது உண்மையா, அதிலும், இந்தப் பின்னூட்டம் என்பது வில்லங்கமான போதை; அடுத்தவன் சந்திலே நின்று ஒன்றைப் பேசுவதா இல்லையா, பேசுவதானால், எப்படி, பேசியதற்குப் பின்னாலே, வரப்போவது எப்படி என்றெல்லாம் நேரத்தைச் செலவழித்து மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. மிக மிக அவசியம் என்று தோன்றுகிறபோது மட்டும், பின்னூட்டி விட்டு, பேசாமல், மீதிக்கு முன்னைப் போலவே, பதிவு போட்டவரின் முகவரிக்குக் கணிதாசி போட்டால், அவருக்குப் பின்னூட்டமும் ஆகிறது, உஷா போன்றவர்களுக்கு வழக்கம்போல, இது புரியவில்லையே என்ற நித்திரையைக் கலைக்கும் கவலையோ மூர்த்தி போன்றவர்களுக்கு தான் நாளைக்குப் போடப்போகும் பதிவுக்கு இன்றைக்கு நான் சொன்னதாக வேறு யாராவது எதுவும் தவறாகச் சொல்லிவிடவில்லையோ அல்லது சரியாகச் சொல்லாமல் விட்டுவிட்டேனென்றோ ஆதங்கம் ஏற்பட்டதான கவலை இல்லை அல்லவா? குறைந்தபட்சம், தலைப்புக்கும் வாலுக்குமிடையே தொடர்பிருக்கிற மாதிரி திசை திரும்பாமல், தண்டவாளவண்டிபோல, அடுத்தவர் பின்னூட்டம் ஓட வசதிப்படுமே என்கிற பொதுநலமே ;-)

கறுப்பி, ஹூஹூம்!

Jayaprakash Sampath said...

//மிக மிக அவசியம் என்று தோன்றுகிறபோது மட்டும், பின்னூட்டி விட்டு, பேசாமல், மீதிக்கு முன்னைப் போலவே, பதிவு போட்டவரின் முகவரிக்குக் கணிதாசி போட்டால், அவருக்குப் பின்னூட்டமும் ஆகிறது//

ஓ... அதான் விஷயமா? வலைப்பதிவுகள் ஏன் டல்லடிக்கின்றன என்பதற்கான காரணம் இப்பத்தான் புரிகிறது :-)

SnackDragon said...

பெயரிலி,
இந்த நடை அனேக வலைப்பதிவாளர்களுக்கு தோதாக வரும் என்று எனக்குப்படிகிறது.
// குழப்பம் உனைப் படுத்துமென்றால்,
தவிர்க்கின்றேன் உன்// இது என்ன திடீரென்று இலங்கைத்தமிழிலிருந்து இப்படி ஜுனூன் தமிழுக்கு போனால் எப்படி?
"உனைக் குழப்புமென்றால் " எப்படி? வேறு ஏதாவது காரணம் இல்லாதவரை நெற்றிக்கண் திறப்பினும் குத்தம் குத்தமே :)
//என்னை
இனிமையின் தளையிருந்து.//
யுவர் சுவீட்னெஸ்
= என்னையுன் இனிமையிலிருந்து ... என்றல்லவா இருக்கவேண்டும் ... பொருட்குற்றம் :)
என்னை இணையத்திலிருந்து விடு ராசா என்று ஓடமாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)
கவிதைகள் சூப்பர். சும்மா சூப்பர் சொல்வதற்கு, இப்படி விஷர்மன சூப்பர் மேம்பட்டதுதானே ;-)
முன்னரே சொன்னது போல் , இந்தத் தமிழ் தமிழ்நாட்டுததமிழுக்கு மிகவும் ஏற்புடையதாகப் படுகிறது. இன்னும் நிறைய வேண்டும் இது போல்.

ஒரு பொடிச்சி said...

சில சில இடங்கள்ல வரிகள/வரிசையை மாற்றிப் போட்டா இன்னும் இயல்பா இருக்குமெண்டு பட்டது.
உதாரணத்துக்கு,

உன் கண் முன்னே
ஆதி முதல் அந்தம் வரை
என் வாழ்வு எல்லாமே
நான் நிர்வாணப்படுத்தி வைத்தேன்;
எதும்
மறைத்திடாது, என்னுள்ளே
தரித்துப் பதுக்கிடாது- அதனாற்றான்,
இன்னும் புரியவில்லை இங்கே என்னை, நீ"

என்று. என் வாசிப்புக்கு இப்பிடி போட்டா இன்னும் நல்லா இயல்பா இருக்கு மாதிரி படுகிறது.. இல்லாமலும் இருக்கலாம்!

மற்றப்படி, மொழிபெயர்ப்பும் கவிதைத் தெரிவும் நன்றாக இருக்கிறது.

-/பெயரிலி. said...

யுவர் சுவீட்னெஸ் குரங்கே ;-)
ஜூனூனா? புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)

ஒரு பொடிச்சி, நீங்கள் கூறியிருக்கும் திருத்தம் நன்றாக இருக்கின்றது. என் பெயர்ப்பிலே, கார்த்திக் சொன்னதுபோல ஜூனூன் தமிழ்த்தன்மையை உணர்ந்தேன். அந்தக்காலகட்டத்திலே, கவிதையோ, கதையோ, கட்டுரையோ அப்படியான வரிக்கு வரியான பெயர்ப்புகளையே, (ஆங்கில)மூலத்துக்கு அருகாக இருப்பதைப் பொருத்தமென்று எண்ணிப் பெயர்த்தேன். அதன்விளைவே இது.

பாஷோவின் தவளைக்கவிதை
"Old pond...
a frog leaps in
water's sound."
இனை

"பழையபொய்கை...
தவளை தத்திப்பாய்ந்தது,
நீரின் சத்தத்தில்."

என்று பெயர்த்திருக்கிறேன். இன்றைக்குப் பெயர்ப்பின்,

"பழம்பொய்கை
இளந்தவளை / பாய்தவளை
நீரொலிப்பு / நீர்த்தெறிப்பு/ நீர்த்தாரை"
என்றமாதிரியேனும் முடித்துவிடலாமென்று தோன்றுகிறது.

இளங்கோ-டிசே said...

பெயரிலி,
கார்த்திக் கூறியதுபோலவே, எனக்கும் இந்தக்கவிதைகளை முதலில் வாசித்தபோது, கொஞ்சம் பழைய காலத்தமிழில் மொழிபெயர்ப்பு இருக்கிறதோ என்று தோன்றியது. ஆனால் தாகூரின் கவிதைகளை (செவ்விலக்கியங்கள் போல) இப்படியான மொழியில் எழுதாவிட்டால் அதன் இயல்பும் கெட்டுவிடும் அபாயமும் இருக்கிறதுதானே. மற்றபடி மொழிபெயர்ப்பு பிடித்திருந்தது. மொழிபெயர்க்கப்பட்ட காலகட்டத்தைப் பார்த்தால், யாருக்கோ தூது விடுவதற்காய் எழுதப்பட்டதுபோலத் தோன்றுகின்றது. ஏதோ நல்லது நடந்திருந்தால் சரி :-).

-/பெயரிலி. said...

/மற்றபடி மொழிபெயர்ப்பு பிடித்திருந்தது. மொழிபெயர்க்கப்பட்ட காலகட்டத்தைப் பார்த்தால், யாருக்கோ தூது விடுவதற்காய் எழுதப்பட்டதுபோலத் தோன்றுகின்றது. ஏதோ நல்லது நடந்திருந்தால் சரி :-)./
தம்பீஇஇஇ, குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கிப் பாக்கிறதெண்டுதான் நிக்கிறீர்போலை; பேசாமல், மெய்யாகவே உமக்கு கலியாணப்பதிவு ஏப்ரல் ஒண்டிலையோ அதுக்கு முதற் புதனிலையோ நடந்திருக்கலாம். என்ரை பங்குக்கும் ஏதாச்சும் குழப்பத்தை உண்டாக்கியிருப்பன். ;-)

SnackDragon said...

// இப்படியான மொழியில் எழுதாவிட்டால் அதன் இயல்பும் கெட்டுவிடும் அபாயமும் இருக்கிறதுதானே. //
இதுவும் சரிதான். அய்யா புருடா மாப்பிள்ளை, நாங்க எல்லாம் "மனைவியைக் காதலி" ரகம். பெயரிலி
யூ ஓ மீ ஒன். ;-) உனக்கு இருக்குடி கல்யாணம் ஆகட்டும்!!

இளங்கோ-டிசே said...

//நாங்க எல்லாம் "மனைவியைக் காதலி" ரகம்//
அப்ப நாங்கள், 'காதலியை மனைவியாய் நேசி'ப்பதாய், Dunkin Donutsல் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கை என்னவாயிற்று மாமூ? குடிக்கின்றவன் கதை, cupல் கடைசித்துளி இருக்கும்வரைதான் என்ற யாரோ சொன்னது சரியாய்த்தான் பொருந்துகிறது, உமக்கு :-).
....
பெயரிலி, நீங்கள் விரும்பும், 'குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டுபண்ணும்' மகிழ்ச்சியை இப்போதைக்கு நான் தாரை வார்த்துக்கொடுப்பதில்லை என்று முடிவுசெய்துள்ளேன். ஆனால் கார்த்திக், விரைவில் 'மனைவியைக் காதலிப்பதை'ப் பரீட்சித்துப்பார்க்கப்போகின்றார் என்று புலனாய்வுத்துறை கூறுவதால், உங்களுக்கு என் தொந்தரவுகளிலிருந்து நிம்மதி பெற விரைவில் வாய்ப்பு அதிகம் :-).

-/பெயரிலி. said...

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.. ஒண்ணுமே புர்யல்லே ஒலகத்திலே

Sri Rangan said...

இரமணி,மொழிப்பெயர்ப்பென்தே ஒரு வகையிற் கொலை செய்வதுதானே?ஏலவே உணர்ந்த பொருளுக்கு தோதான வார்த்தைகளைத் தேடிக்கொள்வதுதாம் மொழிமாற்று வித்தை.இதை எந்த மொழிவிற்பனர்களும் அச்சொட்டாகச் செய்ய முடியாது.உங்கள் மொழிமாற்று எந்த வகையிலும் இரபீந்தரநாத் தாகூரைக் கொல்லவில்லை.எனினும் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருப்போரால் மூலப் படைப்பாளியின் -கவியுள்ளம் கண்டு கற்றல் இல்லாதுபோய்,வெறும் சொற்சிலம்பம்தாம் இறுதியில் எஞ்சுகிறது.

-/பெயரிலி. said...

/எனினும் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருப்போரால் மூலப் படைப்பாளியின் -கவியுள்ளம் கண்டு கற்றல் இல்லாதுபோய்,வெறும் சொற்சிலம்பம்தாம் இறுதியில் எஞ்சுகிறது./

ஏற்றுக்கொள்கிறேன்