Tuesday, May 03, 2005

துளிர் - 21


Rock 'n Red


*Photosloped

"பாறையில பூ முளச்சி, பாத்தவக யாரு?"

நான் எதையெல்லாம்
உங்களில் தொற்ற வைத்தேன்?

நீங்கள் எவற்றையெல்லாம்
எடுத்துக் கொண்டீர்?

நான் அறியேன்.

ஆனால் நான் கனிந்தேன்
உங்கள் தோளணைவால்
வெம்பலாகாமல்.

வேர் ஏன் அறுந்தது?

அத்தேசம் என்னை
உயிர்ப்பிக்கட்டும்.

என்னைத் தள்ளுங்கள்

தள்ள முடியாதவை
எல்லாவற்றையுமே
உரைத்துப் பாருங்கள்
நிறுத்துக் கொள்ளுங்கள்.

நிறுவைப் படிகள்
உங்கள் கைகளில்.

காவிரிப் படுகையிலும்
வைகைக் கரை நெடுகிலும்
கா¢சல் மண் காட்டிலும்
என்னுடன் அலைகையில்
எதை நீர் விதைத்தீர்?

பருத்தி வெடித்தால்
தறியினில் நெய்யலாம்,
கரும்பு விளைந்தால்
ஆலையில் பிழியலாம்,
கம்பு பயிரானால்
கூழ் காய்ச்சிக் குடிக்கலாம்,
கூட்டு நினைவினில்
பயிராகி வளர்ந்தவை
ஆறாத் துயரென்றால்....
கருத்துகள் பற்றிக் கொள்ளும்

சந்தேகம் கொள்ளற்க
கற்களின் உரசலில்
தீப்பொறி தெறிக்கும்.
பாறை இடுக்கிலும்
நீர்மை கசியும்.

சொர்க்க பூமியும்
கனவுத் தேசமும்
எங்குமே இல்லை.

இரத்தமும் சதையுமாய்த்தான்
பாதைகள் வி¡¢யும்
என் தேசம் போல
வெந்து தணியாக் காடாக....

நீலமலைத் தொடா¢னின்றும்
ராமர் அணை மேட்டிலிருந்தும்
எட்டிச் செல்லாப்
பாடமாக....

இன்றுபோய் நாளை வரும்.
உயிர்ப்பேன்
உங்களிடை இருப்பேன்.

கைகள் கொள்ளா
கலைச் செல்வங்கள் காவியும்
நெஞ்சு முட்ட
அன்புதனை நிறைத்தும்

நேசக் கடல் நாடி
வருவேன்-
முகம் பெற்றவனாக

1988 பாக்கு நீரிணை

-கி. பி. அரவிந்தன்
("முகம் கொள்" இலிருந்து)




No comments: