Sunday, February 12, 2006

குவியம் - 26

அரூபச்சொடுக்கு
சவக்காலைச்சலசலப்பு; இரவு நேரங்களில் அலறல் உலாவும்; விழித்திருந்து அறிந்த ஒரு செயல் அதுவேயென அலறுகிறன அவலத்தில் ஆந்தைகள்; எரியும் வயிறோடு நரிகள் பசியுடன் கிளறி அழுகிறன; இவை தின்ற எலும்பு மீதத்துக்காக இருட்டில் கண் மின்ன அலைகிறன கழுதைப்புலிகள். அவரசமான அவசரம்; வேண்டாதார் தோண்டிய குழிகளின் பிணங்களை மூடவும் வேண்டா நிலங்களின் குழிகளை விழையத் தோண்டவும்; சாம்பலை ஆள் மறைக்கப் போர்த்துக்கொண்டு ஆடுகின்றான் அம்பலத்தில் துன்பியல் நிருத்தம் அத்தேவன். அது கண்டு சாம்பல் பூக்கின்றான் ஆங்கே ஓர் அசுரன். தட்சனாகான்; ஆனால், வனைதச்சனாவான். போட்டார் ஆட்டம் சுற்றிக் காண்பார் கண்களைக் கொண்டு பிறந்தது அர்த்தம். காக்கை இருக்க விழுகிறதாம் காட்டில் பனம்பழம். இருக்கும் காக்கை எதுவாயுமிருக்கும். இயற்கைக்கு உண்டோ உன் காக்கை என் காக்கை? புவி இயல்புக்கு மாறுமோ உன் பழம் என் பழம்? உண்ணத்தான் எண்ணத்தே பிணம் தோண்டும் நரிகள் பிரேதப்பரிசோதனை செய்ததாகக் கேள்வியுண்டோ? கிளறாத நிலங்களிலே குழிகள் பிறப்பதில்லை; குழிப்படுத்தாத நிலங்களில் ஊர்ந்து புழு மணப்பதில்லை.

(தங்கமணி எழுதியிருந்ததை வாசித்த பிறகு பழையவற்றினைக் கிளற ஆசைப்பட்டதால், கிளறியது புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக்கொள்வது என்பது இதுதானென்றால், சொல்ல ஏதுமில்லை;-))

No comments: