Monday, March 12, 2007

கணம் - 489



பின்னிரவுக் குடிநீருக்குக்
கடக்கும் வேளையிற்
கட்டிலைப் பார்க்கிறேன்.

நடுமதிய வெயில் துவளுஞ் செடி
தூங்கும் இரவின்பின் என் கட்டில்

தளிரின் தலை நுனியில்
கனவில் முனை துளிர்
ஒரு பூ; சூரியகாந்தி;
தூங்கும் செடியின்
தூங்காக் கண்பூ திசை
திரும்பித் திரும்பி
வானம் விரித்ததாம்
கனவு.

பூவைப் பிய்த்துப்போட
கழுதைப்புலி அலையும்;
கழுகு தாழும் அலை எழும்;
எலி பல் நன்னச் 'ச்சச்'சிடும்.

ஓரடி ஏற்றத்தில் இரு படி
மாடி கடக்கும் மாவீரனாம்
பூவின் தோட்டக்காரன்; காண்,
மனிதசாத்தியத்தின் உச்சக்காரன்.

கனவுச்செடி,
கழுதைப்புலிக்கும்
கழுகு, எலிக்கும்
கவலைப்படாது
பூ
பல் பால் விரிய
விடியத் தூங்கும்
கை வீசி இங்கும்
கால் வீசி அங்கும்.

தோட்டக்காரன் தொலைவைத்
துளைத்துப் பார்த்தான்.
ஈரப்பலகணிக்கப்பால்
பால் பனியும் அழுத்தி இருள்
மரங்கீறு முகிலைக் கிழித்து
நில....................?

.

'06 மார்ச் 12 திங்கள் 02:21 கிநிநே.



-/சித்தார்த்த 'சே' குவேரா.

No comments: