Thursday, March 27, 2008

விடு பட்டுப்போனவை

அண்மைய தமிழ்மணம் நீக்குதல்களின் பின்னால், 'நேர்மையான பதிவர்கள்' நேர்மையாகப் -/பெயரிலி.யினை விமர்சிப்பதை நேர்மையற்ற தமிழ்மண நிர்வாகம் அனுமதித்துக்கொண்டிருப்பதைக் கண்டிக்கிறேன். அதேநேரத்திலே தமது 'விச(ர்ம)ன இடுகை'களிலே -/பெயரிலி. பற்றி இஷ்டப்படி பின்னூட்டம் எழுதுவதை அனுமதிக்கும் பதிவர்கள், -/பெயரிலி.யின் அராஜகவதிகாரவர்க்கத்துத்தட்டுக்கழுவியாணியக்கொடுந்தமிழ் புரியாத காரணத்தினாலே அனுமதிக்காமலேயிருக்கும் நியாயத்தினைக் கண்டு புல்லரித்து, உட்கார்ந்த இடத்தை அரிந்துகொண்டிருக்கிறேன் அல்லது சொரிந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு அனுமதிப்படாத புண்ணூட்டங்களை இங்கே சேர்க்கிறேன்.

ஏதாவதொரு நாள் தகவல் தரும் தனிப்பட்ட வெளிநட்புகளும் தமிழ்மணம்நடத்துநெறியும் நடந்தவற்றினை ஆதாரங்களுடன் சொல்ல வழி சேர்க்குமென்றால், அப்போது 'Who's Who' என்பது மிகவும் தெளிவாகும். அதுவரை, நானும் பதிவர்களும் கேட்டு மகிழ இசையும் கதையும் பகுதி கீழே....

இசைப்பரவசப்பட்டுப்போகும் உண்மைத்தமிழர்களுக்கு இசை

http://www.youtube.com/watch?v=80BVkGvoI3s
=========================

மஹா கனம் மாம்பழ வவ்வால் அவர்களது பதிவிலே போட்டு, புலனோடு பொங்கிப்போனது

கதை பகுதி 1

/இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க./

வள்வால்,

நீங்களும் பெயரிலியோடு மாலனுக்குப் பரிந்துரைத்தும் சேதுபாலம் அமைத்தால், புலிகள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள் என்று கருத்து முதல் வாதமும் செய்தும் தனிப்பட்டமுறையிலே சண்டை பிடித்தீர்களே? அல்லது, பெயரிலி பிடித்தானே? ஞாபகமிருக்கிறதா?

சென்னை_சிங்கப்பூர்த் திராவிட அன்பர்களோடு(ம்) நெட்வோர்க் வைத்திருக்காத தமிழ்மணத்தின் தட்டுக்கழுவி அதிகாரவர்க்கத்து அராஜகப்பொறுக்கி திராவிடப்பெண்ணெதிரி வார்த்தைக்கோமாளி பெயரிலி இப்பதிவையும் தூக்கிவிடப்போகிறான். கவனம். ;-)

நிற்க; நீங்கள் ஆயிரம் பிராது கொடுத்து, அதைக் கேட்டுத் தமிழ்மணம் நீக்கியது என்றபோது, அடுத்த பக்கத்தார் அடித்தால், கொடுமையான இலங்கைத்தமிழ்ப்பெயரிலிக்குச் சப்போர்ட்டுக்கு வந்திருப்பீர்களா? (அட அதைக்கூடப் பெயரிலிதான் தமிழ்மணம் சார்பிலே நீக்கியிருக்கவேண்டுமென்பதில்லை; எவர் தமிழ்மணத்துள்ளே கலந்தாலோசித்த பிறகு நீக்கினாலும், பெயரிலிக்கு அடி... ஏனென்றால், அவன்தான் தமிழகத்திலே தஞ்சம் புகுந்து புலம் பெயர்ந்த ஈழப்பெண்கள் என்ற குறைந்த பட்சத் தகுதியுமில்லாத தட்டுக்கழுவியாச்சே ;-)

ஜடாயு அடித்தாலும் தட்டுக்கழுவி பெயரிலிதான் தாங்கவேண்டும்; விடாது கருப்பு உதைத்தாலும் கொடுந்தமிழ் இலங்கைக்கோமாளி பெயரிலிதான் தாங்கவேண்டும். இல்லையா? ஆக, தமிழ்மணத்திலே நன்றாக ஏதேனும் நடந்தால் மட்டும் பெயரிலி செய்திருந்தாலுங்கூட, தட்டுக்கழுவிக்குத் தள்ளி விட்டு வெறும் சென்னை_சிங்கப்பூர்த்திராவிடத்தோழர்களோடு நெட்வேர்க்கிங் பாவ்லா காட்டும் சகோதரிகளுக்கு அர்ப்பணித்துவிட்டு, இரவுக்கழுகு பெயரிலே தட்டுக்கழுவியைப் போட்டு அடியுங்கள்.

வேண்டாததுக்கெல்லாம் இப்படி அடியுதை வாங்கும்போதெல்லாம், தட்டுக்கழுவிக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாதவர்கள் இப்போதுமட்டும் மாட்ரிக்ஸ் பகடியும் அராஜக அதிகாரவர்க்கத்துக்கெதிரான கோஷமும் எழுப்புகின்றார்கள்.

ஒரு பதிவைத் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தூக்கவிரும்புகின்றவன், எல்லோரும் காணும் வகையிலே அப்பட்டமாகத் தூக்கமாட்டான். வாழ்க்கையிலே தமிழகத்திலே தட்டுக்கழுவாமல் வேற்றெங்கும் தட்டுக்கழுவின கொடுந்தமிழ்ப்பெயரிலியானாலும், அத்துணை மூடனாகவிருக்கமாட்டான்.

ஒரு கதைக்குக் கேட்போம்; இப்போது, பதிவுகளைப் பெயரிலி நீக்காமல், வேறு யாராவது பெயர் போட்டு நீக்கியிருந்தாலும், பெயர் போடாது நீக்கியிருந்தாலுங்கூட, அகதித்தட்டுக்கழுவிப்பெயரிலியைத்தான் திட்டியிருப்பீர்கள், இல்லையா? ;-)

சில வேளைகளிலே இப்படியானவர்களுக்குத் தண்டனையே எவர்களுக்காக சும்மா இருப்பவர்களைத் தாக்குகின்றார்களோ, அவர்களிடமே அதே தண்டனையை வாங்கிக்கொள்ளச் சொல்வதுதான். காலம் சிறந்த மருந்து. அப்படி வாங்கிக்கட்டிக்கொள்ளும்போதுகூட, தட்டுக்கழுவி வந்து "இது எப்படி இருக்கு?" என்று ஒரு சிகிரெட்டைக் கையாலே தட்டி வாய்க்குள்ளே எம்பமாட்டான் :-)

வேண்டாபெண்டாட்டி கைப்பட்டாலும் காலிலே பட்டாலுமே குற்றம்; கொழுந்தமிழ்பேசும் தட்டுக்கழுவி ஒருவன் தமிழ்மணத்திலேயிருந்தால், திராவிடப்போராளிகள், தலித் வீரர்கள், பெரியாரியப்பெரியோர், கம்யூனிஸ்டுப்புரட்சிவாதிகள், இந்துத்துவாஇந்தீயதேசியவாலிகள் எல்லோருக்குமே நெற்றிக்கண் திறக்கக் குற்றம் காண வசதிப்படும்.
வாழ்க :-)

"என்ன கொடுமை சார், இது?" என்று சொல்லிவிட்டுப் போகலாமென்றால், புரியாத தமிழிலே எழுதுகிறான் என்று சொல்லிவிடுவதே இப்போதைய 'பாஷன்' என்பதால், "என்னக்கொடுமை சார் இது! தமிழிலே ஒரு வசனம் ஒழுங்காகப் பேசவோ வாசிக்கவோ தெரியாதவர்களெல்லாம் தமிழ்ப்பதிவு புரியவில்லை என்கிறாகள்! தமிழுக்கு வந்த சோதனை!"

வவ்வால்களும் விலாங்குகளும் நிறைந்த வலையுலகத்திலே என்னத்தைச் சொல்லி? :-)

இதை என் பதிவுக்கிட்டங்கியிலும் போட்டு வைக்கிறேன்


சமீபத்திற் படுத்தியவை

விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.

விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.

விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.

எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.

விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.

~19 May 2004 Wed. 21:06 CST


எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

fin.




=========================
படம் பார்த்துப்பார்த்தே பரவசப்பட்டுப்போகும் உண்மைத்தமிழர்களுக்கு இடைவேளையிலே இசை

http://www.youtube.com/watch?v=ULNrLd_bRJ0


=========================


உயர்திரு உண்மைத்தமிழன் பதிவிலே போட்டு, ஒளிந்து உருப்படாமலே போனது

கதை பகுதி 2

அய்யா உண்மைத்தமிழரே

உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத்தருவது இது முதற்றடவை அல்ல ஆதலினால், விட்டுவிடலாம்.

ஆனால்,

/அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.

‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./

இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம். குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?

நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.

அதேபோல,
/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/

இப்படியான கருத்துகளை ஒருவர் போகிறபோக்கிலே விதைக்கிறார். சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில்ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப்போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக்கழுவி, கொடுந்தமிழீழத்து அதிகாரவர்க்கத்து அராஜகப்பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்துவிட்டுப்போவீர்கள். அப்போதும் இந்தப்பதிவு நீக்கப்படவில்லையே? :-(

அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை. பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே. மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி "சண்டை போட்டுக்கொண்டு"தான் இருக்கிறான். இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே. பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக்கழுவி ஆணீயப்பித்தளைப்பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே. சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கியபின்னர், பெயரிலியையே குறிவைத்துத்தாக்கி இரவுக்கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர்ப்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே. இத்தனைக்கும் அதேகாலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் பதிவர், "இங்கே எங்களுக்குள்ளே இரவுக்கழுகாரும் இருக்கின்றார்" என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே. தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம். ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.

இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்? உங்களையோ மற்ற திராவிடக்கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை. அதனால், கவலையில்லை. தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்கவேண்டாமா?

இத்தனை திட்டித் தட்டித்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக்கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.

சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா? இல்லையே, அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக்கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப்போனார்கள்! போகிறார்கள்!!

சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.

நிற்க; பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப்பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டுகொண்டிருக்கின்றீர்கள்? பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை. தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு. தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதேநேரத்திலே, தமிழ்மணத்துக்கு - இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத்தாக்குதல் - இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.

வாழ்க நீர் எம் man


=============================
சினிமாப்பாட்டுக் கேட்டே பரவசப்பட்டுப்போகும் உன்னதத்தமிழர்களுக்கு முடிவிலே இசை

http://www.youtube.com/watch?v=W0jp8ffvhqA&NR=1

No comments: