Thursday, August 09, 2012

கதாகாலம்



  • கதாகாலம்
    -------------


    சீர்திருத்தக்காரன் சீந்தாமல்
    சிதிலமாய்ச் சிதறிச் சரிகிறான்  
    கொல்லப்பட்டவன் கதைகளைக்
    கொலைகாரன் எழுதுகின்றான்

    இடைத்தரகன் கூலிக்குச் சூல் சுமக்கிறான்

    மாடுமேய்ப்பவன் எல்லைக்கோடுக்கப்பாலும்
    பெருவிரலழித்து வந்து போகிறான்
    இத்தனைக்குப்பின்னும்
    எஞ்சியவன் விந்தி 
    உந்திக்கொண்டிருக்கிறான்

    சவத்தின் இலக்கியம்,
    பனியாய்ப் பொழிந்து
    மழையாய்ப் பெருகி
    கதிராய் எரித்து
    -கடந்து போகிறது 
    காலம்.

    மனிதனின் மகத்தான பதக்கத்தை
    உன்னதமாய் நீயே வைத்துக்
    கொ...............ல்.

No comments: