Tuesday, January 21, 2014

1



இல்லாத ஒருவனைப் போல் என்னை அழித்துப்போகிறாய்.
காற்றாகிப் போனானென்று விரித்துக் கை விசுக்கிப்போகிறாய்
காவோலைக்கிழமென்றோ கைக்குழவியென்றோ
எண்ணிக்கடக்கின்றாய் முன்னால்?
அடங்குகுடத்துப்பூதம் அவிழக்கண்டு
மூர்ச்சையாகு காலம் உன்முன் எழமுன்
ஆங்கே நில்!
சொல்வேன்!
அறியாய் நீ!
பெயரிலி என்பதுவும்
ஒரு பெயர்தான்;
கடைகிழிய, பெருவாயால் உயிருறுஞ்சி
பிள்ளைதின்று சடைச்சிரசு முள்ளால்
புவிநடந்த பொல்லாப்பழம்பேயொன்றின்
இல்லாதிருத்தலில் இருக்கும் பெயர்தான்.
புரிதலின்போது புரிவாய்
வரும் காலம்
வருங்காலம்.

01/21/2012 செவ். 00:28 கிநிநே

No comments: