Saturday, June 03, 2017

க்

அவுஸ்ரேலியாவிலே தமிழ்க்காவலாளி ஒருவர் ஏதிலியாக விண்ணப்பித்திருக்கும் ஒரு பெண்ணை அனுமதியின்றி முத்தமிட்டது தொடர்பாகப் பீத்திக்கிழிப்பவர்களிலே பாதிப்பேர் மூதூரிலே பாடசாலைப்பிள்ளைகளுக்கு நடந்ததைப் பற்றி மூச்சே விடமாட்டார்கள் என்கிறார்கள். மூதூரிலே நிகழ்ந்ததுக்குத் தாம்தூமென்று துள்ளுகின்றவர்கள், முத்தமிட்ட எச்சிலைத் துடைத்துவிடாமற்கூடப் போகின்றார்கள்.

எவரும் பிறாண்டமுன்னால், இவ்விரு நிகழ்வுகளையும் காணாமற்போங்களென்பதாக நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், கண்டிப்பதிலும் இருக்கின்ற அரசியலையும் பேசவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காற்பாதித்தமிழ்த்தேசியத்தைத் தாங்கவும் தாக்கவும் ஒரு சாராரும் முஸ்லீம்கள் என்பதாலே தாக்கவும் தாங்கவும் மறு சாராரும் தேர்ந்தெடுத்து அடுத்தாரையும் அடுக்காரையும் குறித்து இரண்டு வரிகள் எழுதிவிட்டுப்போகிறார்கள்.
எல்லோருக்கும் நல்லாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்துணைதான் பிடிபடாமல் நெளிந்து நழுவிப்போகத் திறனுடைத்தார் இவர்கள்!

இலக்கியத்துக்கும் உண்டு இலக்கிட இலக்கணம்!

No comments: